கோவை மாநகராட்சி 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இடைநீக்கம்..
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது கோவை மாநகராட்சியில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு மேல் தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு ஒரு சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்ததை ரத்து செய்ய கோரி அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா,பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் பதாகைகளுடன் மாமன்ற கூட்டம் நடக்கும் விக்டோரியா ஹாலுக்குள் சென்று வலியுறுத்தினர். இதனால் மூவரையும் வெளியேறுமாறு மேயர் கூறியதை அடுத்து மூவரும் விக்டோரியா ஹாலிக்கு வெளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்தும் அடுத்த இரண்டு கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தும் மேயர் கல்பனா உத்தரவிட்டுள்ளார்.


