Saturday, September 12, 2026

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்தடைந்தார்.

கரூர் – சேலம் புறவழிச்சாலையில் உள்ள வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்க மைதானத்தின் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 5,000 பேர் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பிற்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், கரூர் சம்பவத்தில் காவல்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கைவில்லை என குற்றம்சாட்டினார். அன்று கூட்டத்திற்கு வரும் போது, காவல்துறையினரே வழியை ஏற்படுத்தி கொடுத்து எங்களை வரவேற்றனர் என்றும், அவர்களின் நாடகத்தையும் நம்பி நானும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன் என்றும் குறிப்பிட்டார். மேலும், பேசிய முதலமைச்சர் விஜய், “ஒரு மனிதனுக்கும் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயர்த்திற்கும் சென்றாலும், மனதளவில் வலிகள், காயங்கள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், எல்லாவற்றை விட அதிக வலியையும், காயத்தையும் கரூர் சம்பவம் எனக்கு அளித்தது. மக்களை சந்தித்து, மக்கள் பிரச்சனையை பேசவே மக்கள் சந்திப்புகளை நடத்தினோம். நாமக்கல் முடிசிட்டு கரூர் வரும் போது கரூர் காவல்துறையினர் எங்களை எச்சரித்திருக்கலாம். அதற்கு முந்தைய கூட்டத்தில் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கரூரில் கூட்டம் அதிகம் இருப்பது தெரிந்தும் காவல் துறையினர் எச்சரிக்கை கொடுக்கவில்லை. ஏதாவது தவறாக இருந்திருந்தால் காவல் துறையினர் தடுத்து நிறுத்திருக்கலாம். அதற்கு பதிலாக அவர்களே எங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தினார்கள். இவர்கள் செய்வது நாடகம் என்று தெரியாமல் அவர்களுக்கு நன்றி கூட அன்று சொல்லினேன். அப்போது காவல் துறையினர் யார் சொல்லி இப்படி செய்தார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அக்கா, தம்பி, சிறு பிள்ளைகளை இழந்த வலியில் இருக்கும் என்னை ஏளனமாக பேசினார்கள். என் மீது பழியை தூக்கிப் போட்டார்கள். இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்ன என்று யோசித்து பார்த்துக் கொண்டு இருந்த போது, ஓடி ஒளிந்து கொண்டேன் என்று சொன்னார்கள். வாய் உள்ளதென்று என்ன வேணாலும் பேசுவீங்களா?” என சாடினார். மேலும், கரூர் சம்பவத்தை என் மீது திருப்பி விட்டு சட்டப் பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்தார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

பணமா? ஜனமா?

திமுகவை கடுமையாக சாடிய அவர், “இப்படியெல்லாம் செய்தால் நான் மக்களை விட்டு ஒடி விடுவேன் என நினைத்தார்கள். பணமா, ஜனமா என்று கேட்டால், எனக்கு மக்கள் மட்டும் தான் முக்கியம். மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் விஜய். என்னை போல் வெளிப்படையாக அவர்களுக்கு சொல்ல தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து கட்சி நிதி குறித்து விமர்சித்து பேசிய அவர், கட்சி நிதி என்ற பெயரில் திமுக கொள்ளை அடுத்ததாக குற்றம்சாட்டினார். இது குறித்து, “ பார்ட்டி பண்ட் என்ற பெயரில் அவர்கள் அடித்த கொள்ளைகளை வெளியே சொல்ல முடியவில்லை. சட்டப் பேரவையில் பார்ட்டி பண்ட் என்ற ஒரு வார்த்தை மட்டுமே சொன்னேன். அதற்கே அவர்கள் எழுந்து வெளியே சென்று விட்டனர். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்” என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், சென்னையில் டெண்டர் விட்டதில் ஊழல் செய்யப்பட்டதாகவும், அதனை தவெக அரசு ரத்து செய்தாகவும் தெரிவித்தார்.

தவெக அரசியல் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், “மின்சாரத்துறையில் இப்போது தான் லஞ்சம் வாங்காமல் பதவி உயர்வு கொடுத்துள்ளோம். அப்போது ஒரு அக்கா கண்ணீருடன் நன்றி சொன்னார். அந்த வீடியோலாம் அவர்கள் கண்களுக்கு தெரியாது. இன்று எந்த அரசு அலுவலகத்திலும் ஊழல் கிடையாது. மக்களுக்கு அரசு அலுவலகத்தில் மரியாதை வழங்கப்படுகிறது. இதனை மக்கள் வரவேற்றுள்ளனர். இதனை பார்த்து மகிழ்ச்சி அடைக்கிறேன்” என்றார்.8,200 பேருக்கு வேலைவாய்ப்பு

எல் & டி நிறுவனத்துடன் ரூ.8,600 கோடி மதிப்பில் மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த போடப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதன் முலம் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார். மேலும், குறுவை சாகுபடிக்காக சிறப்பு திட்டம் அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் தவெக அரசு எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும் எனவும் உறுதியளித்தார்.

குதிரை பேரம் குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், “இந்த தேர்தலில் காசுக்கு வாக்கு என்ற கலாச்சாரத்தையே உடைத்தது தவெக. அப்படி இருக்கும்போது, எங்களுக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள்.

திருட்டு திமுக ஆட்சியில் ஊரை அடித்து உலையில் போட்டு, கொள்ளையடித்ததால்தான் ஒருவர் எங்கே இருக்கார் என்று தெரியாமல் ஓடு ஓடு என்று ஓடிக்கொண்டிருக்கிறார்.

இன்னொருத்தர் வெளிநாட்டில் போய் ஒழிந்துகொண்டிருக்கிறார். வெளிநாடு என்றதும் ஸ்டாலின் சார் என்று நினைத்துவிடாதீர்கள். அவர் இல்லை. ஸ்டாலின் சார் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட பாசம் உண்டு. அவர் கிடையாது. சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைக்கு ஒருவர் சென்றிருக்கிறார். அவர் தான்” என சூசகமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எ.வ.வேலு ஆகியோரை விமர்சித்தார்.

அண்ணா பிறந்தநாளில் தங்க மோதிரம் திட்டம்

இக்கூட்டத்தில் தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “வரும் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும். இத்திட்டலாம் எப்படி செய்ய முடியும் என்று கேட்டார்கள். நான் ரீல் தாய் மாமன் கிடையாது, ரியல் தாய் மாமன்” என கூறினார்.

வெள்ளை அறிக்கை வெளியிட்டது குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், “தீய சக்தி திமுக பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். ஒரு ஓட்ட பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டே இருந்திருக்கிறார்கள். அது எங்க சென்றது என்று தெரியவில்லை. அது அவர்களுக்கு தான் வெளிச்சம்” என நகைசுவையாக விமர்சித்தார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து, “மேகதாது அணை வழக்கில் தமிழ்நாடு அரசு மனுவை எந்த ஆட்சியில் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது ஏன் அதற்கான வாதடவில்லை. இப்படியெல்லாம் ஸ்டாலின் சார் கிட்ட கேட்கலாமா? இப்போது நான் ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள். மாநில உரிமையை எங்க நிலைநிறுத்த வேண்டுமோ அதை தான் செய்ய வேண்டும். நான் யார் தெரியுமா, தொட்டுபார் என்று பேசினால் வேலை நடக்காது. பேசி பேசி, யார் மேலேயாவது பழி போட்டு, மக்களை பிரச்சனையில் விட்டுவிடக் கூடாது. அந்த அரசியல் எங்களுக்கு தேவையில்லை. சட்டப்பேரவையில் இதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அது குறித்து அடுத்தப்படியாக நடவடிக்கை எடுப்போம்” என உறுதியளித்தார்.

மேலும், மத்திய அரசு தொகுதி மறுவரையறையை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்த அவர், நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது, அதனை விடவும் மாட்டோம் என கூறினார்.

கரூரில் நினைவு சின்னம்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தவெக சார்பில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

இடைத்தேர்தலில் திமுகவை வெச்சி வெளுத்து விடுங்கள்

சோஃபா, வாஷிங் மிஷன் என தவெகவை விமர்சிப்பதாக கூறிய அவர், திமுக தான் பணம் எண்ணும் மிஷின் போல செயல்படுகிறது என பதிலடி கொடுத்தார். மேலும், வரும் இடைதேர்தலில் திமுகவை அடியோடு அகற்றி, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, வரும் இடைத்தேர்தலில் அவர்களை நல்லா வெச்சி வெளுத்து விடுங்கள்” என முதலமைச்சர் விஜய் பேசினார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...