கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம் வழங்கினார். இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்தது. இந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் கடந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று கரூர் சென்று பொதுக்கூட்டத்தில் பேசினார். இதையடுத்து, கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. க. சாந்தி என்பவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது





