Sunday, September 13, 2026

விரைவில் பத்திரப்பதிவு துறையில் வெள்ளை அறிக்கை..!

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதமாகும் நிலையில், இப்போது வரை நிதித் துறை மற்றும் மின்சார துறையில் வெள்ளை அறிக்கைகளை அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதுதவிர விரைவில் வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேவைப்பட்டால் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 25-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் யாரும் கூடுதல் கட்டணத்தை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வெள்ளை அறிக்கை வெளியாகவும் வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சில தினங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறைக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், அது தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறுகையில், “முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் சர்வர் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இந்நிலையில் முகூர்த்த நாட்களில் பத்திரப் பதிவின் போது சர்வர் கௌளாறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி பத்திரப்பதிவு செயல்முறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை இறங்கியுள்ளதுஒரு குறிப்பிட்ட வகையான சொத்து ஆவணங்களுக்கு எங்கிருந்து வேண்டாமானாலும் பதிவு செய்யும் வசதியை கட்டாயமாக்க உள்ளது. ஒரு சில வாரங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த டிஜிட்டல் ஆவணப்பதிவு முறையின் மூலம், இனி பொது மக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. எங்கிருந்தாலும் 24 மணி நேரமும் இணையதளத்தின் வழியாக இணையவழியிலேயே தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...