Monday, July 13, 2026

கோவையில் கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்…

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

கோவை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவை மாவட்ட போலீசார் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய நடத்திய வாகன சோதனையில், சட்ட விரோதமாக மண் அள்ளிச் சென்ற 30-க்கும் மேற்பட்ட கனரக லாரிகளை பிடித்து அதிரடியாகப் பறிமுதல் செய்து உள்ளனர்.

கோவையின் புறநகர்ப் பகுதிகளான சூலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை மற்றும் தடாகம் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் மற்றும் தரிசு நிலப் பகுதிகளில் இருந்து, நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நூற்றுக் கணக்கான லாரிகளில் கிராவல் மண் பதுக்கி கடத்தப்பட்டு வருவதாக மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. ​இதை அடுத்து, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவையின் பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற இணைப்புச் சாலைகளில் நேற்று இரவு முழுவதும் தீவிரப் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, போலீசாருக்கு மணல் கடத்தி வந்த லாரிகளை மடக்கி, சோதனை சோதனை நடத்தினர். ​அப்போது உரிய அரசு அனுமதியோ, கனிமத் துறையின் முறையான ஆவணங்களோ இன்றி, விதிகளுக்குப் புறம்பாக நள்ளிரவை பயன்படுத்தி டன் கணக்கில் கிராவல் மண்ணை அள்ளி கடத்திச் சென்ற 30-க்கும் மேற்பட்ட கடத்தல் லாரிகளைப் போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட லாரிகளும் உடனடியாக அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சொல்லப்பட்டன.”கைப்பற்றப்பட்ட கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது கனிம வளக் கொள்ளைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் (Fine) விதிக்க வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...