Saturday, September 12, 2026

கோவையில் கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்…

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவை மாவட்ட போலீசார் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய நடத்திய வாகன சோதனையில், சட்ட விரோதமாக மண் அள்ளிச் சென்ற 30-க்கும் மேற்பட்ட கனரக லாரிகளை பிடித்து அதிரடியாகப் பறிமுதல் செய்து உள்ளனர்.

கோவையின் புறநகர்ப் பகுதிகளான சூலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை மற்றும் தடாகம் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் மற்றும் தரிசு நிலப் பகுதிகளில் இருந்து, நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நூற்றுக் கணக்கான லாரிகளில் கிராவல் மண் பதுக்கி கடத்தப்பட்டு வருவதாக மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. ​இதை அடுத்து, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவையின் பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற இணைப்புச் சாலைகளில் நேற்று இரவு முழுவதும் தீவிரப் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, போலீசாருக்கு மணல் கடத்தி வந்த லாரிகளை மடக்கி, சோதனை சோதனை நடத்தினர். ​அப்போது உரிய அரசு அனுமதியோ, கனிமத் துறையின் முறையான ஆவணங்களோ இன்றி, விதிகளுக்குப் புறம்பாக நள்ளிரவை பயன்படுத்தி டன் கணக்கில் கிராவல் மண்ணை அள்ளி கடத்திச் சென்ற 30-க்கும் மேற்பட்ட கடத்தல் லாரிகளைப் போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட லாரிகளும் உடனடியாக அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சொல்லப்பட்டன.”கைப்பற்றப்பட்ட கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது கனிம வளக் கொள்ளைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் (Fine) விதிக்க வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...