கோவை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவை மாவட்ட போலீசார் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய நடத்திய வாகன சோதனையில், சட்ட விரோதமாக மண் அள்ளிச் சென்ற 30-க்கும் மேற்பட்ட கனரக லாரிகளை பிடித்து அதிரடியாகப் பறிமுதல் செய்து உள்ளனர்.
கோவையின் புறநகர்ப் பகுதிகளான சூலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை மற்றும் தடாகம் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் மற்றும் தரிசு நிலப் பகுதிகளில் இருந்து, நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நூற்றுக் கணக்கான லாரிகளில் கிராவல் மண் பதுக்கி கடத்தப்பட்டு வருவதாக மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இதை அடுத்து, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவையின் பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற இணைப்புச் சாலைகளில் நேற்று இரவு முழுவதும் தீவிரப் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, போலீசாருக்கு மணல் கடத்தி வந்த லாரிகளை மடக்கி, சோதனை சோதனை நடத்தினர். அப்போது உரிய அரசு அனுமதியோ, கனிமத் துறையின் முறையான ஆவணங்களோ இன்றி, விதிகளுக்குப் புறம்பாக நள்ளிரவை பயன்படுத்தி டன் கணக்கில் கிராவல் மண்ணை அள்ளி கடத்திச் சென்ற 30-க்கும் மேற்பட்ட கடத்தல் லாரிகளைப் போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட லாரிகளும் உடனடியாக அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சொல்லப்பட்டன.”கைப்பற்றப்பட்ட கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது கனிம வளக் கொள்ளைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் (Fine) விதிக்க வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


