கோவையில் 28 வயது பெண் 50 வயது ரியல் எஸ்டேட் அதிபருடன் தொடர்பு – டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர மறுக்கிறார்” என வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கும், கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சமாதானப்படுத்துவதற்காக அந்த குடும்பத்தில் புகுந்த 50 வயதான ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில மாதங்கள் தனியாக வீடு பிடித்து வசித்து வந்து உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். இதனால் பெண்ணை விட்டு பிரிந்து வந்து விட்டார்.
தன்னை ஏமாற்றியதாகவும், குழந்தைக்கு இவர் தான் காரணம் என்றும் ஏற்கனவே அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை , அந்த பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வசிக்கும் ஆவாரம்பாளையம், மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முன்பு ரோட்டில் உட்கார்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னை கொலை செய்யப் போகிறார்கள் என்றும் கூறி கோஷமிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், பீளமேடு போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் கூறும்போது,
இந்த குழந்தைக்கு தந்தை அவர் தான் என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட்டும்,, அந்த பரிசோதனைக்கு வர மறுக்கிறார். எனவே டி.என்.ஏ. பரிசோதனைக்கு அவரை உள்படுத்தி என்னுடைய குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று நிரூபிக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து அந்த பெண் கலைந்து சென்றார்.


