Sunday, July 26, 2026

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து, யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, காங்கிரஸ் தலைமை வி.டி.சதீசன் தான் அடுத்த கேரளம் முதலமைச்சர் என முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து, இன்று வி.டி. சதீசனுக்கு கேரளம் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றது போலவே, முதலில் வந்தே மாதரம், அதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்ட பின், வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

கேரளம் சட்டப்பேரவை வளாகத்திற்கு பின்னால் அமைந்திருக்கும், சென்ட்ரல் மைதானத்தில் வைத்து முதலமைச்சர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் வி.டி. சதீசனுடன் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.இம்முறை கேரளம் சட்டப்பேரவையில் 3 பெண் உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிந்து கிருஷ்ணா, கே.ஏ. துளசி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவையின் துணைத்தலைவராக ஷைனிமோள் உஸ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1960-ஆம் ஆண்டில் பேரவை அதிகாரத்தில் அங்கம் வகித்த ஏ. நஃபீசத் பீவிக்குப் பிறகு, இம்மாநிலத்தின் சட்டப்பேரவையில் அதிகாரத்தைப் பெறும் முதல் பெண்ணாக ஷைனிமோள் உருவெடுத்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம்வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பி.கே. குன்ஹாலிகுட்டிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக, வி.டி.சதீசன் அமைச்சரவையில், 21 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த அமைச்சர்களின் பெயர் பட்டியலை நேற்றைய தினமே (மே 17) ஆளுநர் அர்லேகரிடம் வி.டி. சதீசன் ஒப்படைத்திருந்தார்.

மொத்தம் 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற நிலையில், மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.அதில், ஆளும் அரசாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி (எல்.டி.எஃப்) வெறும் 35 இடங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. அவர்களுக்கு எதிராகக் களம்கண்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யூ.டி.எஃப்) 102 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றியை பதிவு செய்தது. மூன்றாவது இடத்தில் பா.ஜ.க 3 தொகுதிகளை வென்றிருந்தது.

கேரளம் முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்ற நிகழ்வில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டு, புதிய அமைச்சரவைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...