Saturday, June 6, 2026

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

Must read

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து, யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, காங்கிரஸ் தலைமை வி.டி.சதீசன் தான் அடுத்த கேரளம் முதலமைச்சர் என முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து, இன்று வி.டி. சதீசனுக்கு கேரளம் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றது போலவே, முதலில் வந்தே மாதரம், அதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்ட பின், வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

கேரளம் சட்டப்பேரவை வளாகத்திற்கு பின்னால் அமைந்திருக்கும், சென்ட்ரல் மைதானத்தில் வைத்து முதலமைச்சர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் வி.டி. சதீசனுடன் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.இம்முறை கேரளம் சட்டப்பேரவையில் 3 பெண் உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிந்து கிருஷ்ணா, கே.ஏ. துளசி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவையின் துணைத்தலைவராக ஷைனிமோள் உஸ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1960-ஆம் ஆண்டில் பேரவை அதிகாரத்தில் அங்கம் வகித்த ஏ. நஃபீசத் பீவிக்குப் பிறகு, இம்மாநிலத்தின் சட்டப்பேரவையில் அதிகாரத்தைப் பெறும் முதல் பெண்ணாக ஷைனிமோள் உருவெடுத்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம்வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பி.கே. குன்ஹாலிகுட்டிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக, வி.டி.சதீசன் அமைச்சரவையில், 21 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த அமைச்சர்களின் பெயர் பட்டியலை நேற்றைய தினமே (மே 17) ஆளுநர் அர்லேகரிடம் வி.டி. சதீசன் ஒப்படைத்திருந்தார்.

மொத்தம் 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற நிலையில், மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.அதில், ஆளும் அரசாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி (எல்.டி.எஃப்) வெறும் 35 இடங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. அவர்களுக்கு எதிராகக் களம்கண்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யூ.டி.எஃப்) 102 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றியை பதிவு செய்தது. மூன்றாவது இடத்தில் பா.ஜ.க 3 தொகுதிகளை வென்றிருந்தது.

கேரளம் முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்ற நிகழ்வில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டு, புதிய அமைச்சரவைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஹார்டு டிஸ்க் திருட்டில் அதிகாரிகளுக்குப் பங்கா..?

அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் (TNEB) தலைமையகத்திலிருந்து, குறிப்பாக டெண்டர்கள் மற்றும் கொள்முதல்கள் மேலும் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான பதிவுகள் அடங்கிய, ரகசியத் தரவுகள் உள்ள சுமார்...