ஈரோடு மாவட்டத்தின் விஐபி தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் தவெக வேட்பாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வெற்றிப் பெற்றுள்ளார்.
இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லசிவத்தை விட 16,620 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். செங்கோட்டையன் மொத்தம் 82,612 வாக்குகளும், திமுக வேட்பாளர் என்.நல்லசிவம் 65,992 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 2,39.179 வாக்காளர்கள் உள்ள நிலையில், மொத்தம் 2,16,910 பேர் வாக்களித்துள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,14,070, பெண் வாக்காளர்கள் 1,25,096 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 13 பேர். 90.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரான கே.ஏ.செங்கோட்டையன், திமுக வேட்பாளர் ஜி.வி.மணிமாறனை சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில் இந்த முறையும் கே.ஏ.செங்கோட்டையன் களம் காண்கிறார். ஆனால் அவர் இந்த முறை அவர் தவெக சார்பில் போட்டியிடுகிறார் என்பதால் இத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அவரை எதிர்த்து திமுக சார்பில் என்.நல்லசிவம், அதிமுகவில் வி.பி.பிரபு, நாம் தமிழர் கட்சியில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது.
செங்கோட்டையனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரது வெற்றியை திமுக அல்லது அதிமுக தட்டிப்பறிக்குமா? தவெக வெற்றிக்கொடி நாட்டுமா? என்பது இன்றைக்கு தெரிந்துவிடும்.


