Friday, May 15, 2026

ஒரேயொரு காங்கிரஸ் மேயருக்கும் சிக்கல்.. திமுகவினர் திட்டம்?

Must read

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தவெக தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க மேலும் 11 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது. மேலும், இனிவரும் காலங்களில் உள்ளாட்சி, மாநிலங்களவை, மக்களவை என அனைத்திலும் தவெகவுடன் கூட்டணி தொடரும் என பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் அறிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டுக்கு திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதன் விளைவாக, கும்பகோணத்தில் மேயராக பதவி வகித்து வருகிற காங்கிரஸைச் சேர்ந்த கே. சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, துணை மேயரான திமுகவை சேர்ந்த சு ப தமிழழகனை மேயராக்க திமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக திமுக தலைமையின் முடிவிற்கு காத்திருப்பதாக தெரிகிறது.
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், 39-ல் திமுகவும், 3-ல் அதிமுகவும், (மேயர் உள்ளிட்ட) 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், மதிமுக, ஐயூஎம்எல், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.திமுக 39 இடங்களை பெற்றிருந்த போதிலும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது. காங்கிரஸின் இரு மாமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநர் கே. சரவணன் கும்பகோண மேயராகவும், துணை மேயராக திமுகவை சேர்ந்த சு ப தமிழழகனும் தேர்வு செய்யப்பட்டனர்தற்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில் கும்பகோணம் திமுக மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மேயரை பதவியிலிருந்து நீக்க ஒருமனதாக திட்டமிட்டு வருவதாக தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக ஈடிவி பாரத் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் கே சரவணனிடம் கேட்டபோது, “இது வெறும் வதந்தி. ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. திமுக அப்படியொரு முடிவை எடுத்தால், காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ள தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் எதிரொலிக்கும்.

எனவே இது போன்ற முடிவை திமுக தலைமை எடுக்காது என நம்புகிறேன். ஒருவேளை திமுக தலைமை என்னை மேயர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்தால், எங்கள் காங்கிரஸ் தலைமையின் முடிவை கேட்டு அதன்படி செயல்படுவேன்” என்றார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக இசைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கடைசியாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் இசைக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில்...