Saturday, April 11, 2026

கோலாகலமாக தொடங்கியது இந்திய நாட்டிய விழா; ஒரு மாதத்துக்கு களைகட்டும்

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ’இந்திய நாட்டிய விழா’ மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது. வருகிற ஜனவரி 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாதம் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் நாட்டிய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதனை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “கலைகளின் பிறப்பிடமாக உள்ளது மாமல்லபுரம். இங்குள்ள சிற்ப கலைகள் உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும், பாரம்பரியமிக்க பரத நாட்டியம், இசை, கிராமிய கலைகளை அழியாமல் காத்திட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த விழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

1992-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த விழா கடந்த 2009 ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் ‘இந்திய நாட்டிய விழா’வாக அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மாமல்லபுரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. உலக தரம் வாய்ந்த போட்டிகளான செஸ் ஒலிம்பியாட், கடல் அலை சறுக்கு போட்டி, காத்தாடி திருவிழா, பலூன் திருவிழா போன்றவற்றை மாமல்லபுரத்திற்கு கொண்டு வந்தது திமுக அரசு” என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், “மாமல்லபுரம் கட்டட கலையின் தாயகமாக, சிற்பக் கலையின் சிகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு நடைபெறும் இந்திய நாட்டிய விழாவின் மூலம் சுற்றுலா பயணிகள் இங்கு தங்கும் காலம் அதிகரிக்கிறது. இப்படி இந்தியாவின் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” என்றார். இதன் பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடன குழுக்கள் வரவழைக்கப்பட்டு நடத்தப்படும் இந்த விழாவில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளுக்கு அமைச்சர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...