Thursday, April 9, 2026

கலைமகள் சபா நிதி நிறுவன வழக்கு – ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவு

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவில் கலைமகள் சபா நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா என்ற நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது.
இந்த நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க, பதிவுத் துறை உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அதை எதிர்த்து கோவையைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில், கலைமகள் சபாவுக்கான சொத்துக்கள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் உள்ளதால் தமிழக அரசு அதிகாரிகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து முதலீட்டாளர்களுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஏற்கனவே கோவை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் கணக்கிடப்பட்டு அவற்றின் சந்தை மதிப்பு உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சொத்துக்களையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் சரி பார்த்து மின்னணு முறையில் பொது ஏலம் விட்டு, உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படுகிறது.
இவருக்கு உதவியாக வழக்கறிஞர்கள் எம்.எழிலரசி, என்.பிரேமலதா ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் முறையாக இணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் இந்த ஆணையம் மேற்பார்வையிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...