Saturday, June 6, 2026

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு – தொகுதி பங்கீடு பேச்சா?

Must read

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது திமுக என்ற தீயசக்தியை வீழ்த்தும் நோக்கத்துடனும், திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கும் ராஜதந்திரத்துடனும் பாஜகவை அதிமுக தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி இணைத்திருக்கிறார்  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று கூறாமல், அதிமுக தலைமையிலான கூட்டணி என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் தெரிவித்தார்.
அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ‘கூட்டணி ஆட்சி’ என்ற சொல்லாடலை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், தனித்து ஆட்சி எனக் கூறி பாஜகவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு இந்த சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம்,

எடப்பாடி பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசினீர்களா? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதற்காக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை” என்றார். டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர் நாளை மறுதினம் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா ? என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஹார்டு டிஸ்க் திருட்டில் அதிகாரிகளுக்குப் பங்கா..?

அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் (TNEB) தலைமையகத்திலிருந்து, குறிப்பாக டெண்டர்கள் மற்றும் கொள்முதல்கள் மேலும் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான பதிவுகள் அடங்கிய, ரகசியத் தரவுகள் உள்ள சுமார்...