தடகளப் போட்டியில் கலந்து பரிசுகளை வென்ற காவலர்கள்..
கோவை மேற்கு மண்டல காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பிப்ரவரி 13 முதல்16 வரை நடைபெற்ற 63-வது தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி (63-rd TAMILNADU STATE POLICE INTER-ZONAL ATHELTIC CLUSTER-2023) போட்டியில் பங்கேற்றனர். மேற்படி தடகள போட்டியில் பங்கேற்ற 42 காவலர்கள் தங்கப்பதக்கம்-6, வெள்ளி-16 மற்றும் வெண்கலம்-20 பரிசுகளை வென்றுள்ளார். மேற்படி பரிசுகளை வென்ற காவலர்களை பாராட்டும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று (19.02.2024) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார்.


