Sunday, September 13, 2026

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் வேலைகளிலும் பாஜகவினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் தமிழ்நாட்டில் அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அந்த வகையில், மார்ச் 1ம் தேதி மதுரையிலும், மார்ச் 7 ஆம் தேதி வேலூரிலும் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்த, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி மதுரைக்கு பொறுப்பாளர்களாக பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், பொன் வி.பாலகணபதி ஆகியோரும்; வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக மாநில துணைத்தலைவர் நாகராஜன், பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இவர்களுடன் அதிமுகவின் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, வேலூர் கோட்டை மைதானம் மற்றும் பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில், சென்னை – பெங்களூரு ஆறுவழிச் சாலையோரம் உள்ள மைதானம் ஆகிய இடங்கள் பார்வையிடப்பட்டன. தேர்வு செய்யப்படும் இடத்தின் பரப்பளவை பொருத்து, கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை திட்டமிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 7-ம் தேதி நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தே.ஜ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமின்றி, புதிதாக இணையவுள்ள கூட்டணிக் கட்சிகளும் மோடி வருகை தரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி வேலூருக்கு வருகை தரும் அதே நாளில், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மும்முரமாக நடந்து வருகிறது. குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி இந்த கோயிலுக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...