Monday, May 25, 2026

பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் – அரசாணை வெளியீடு

Must read

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

பனை மரங்கள் வெட்டப்படுத்தவதை தடுக்க ஆட்சியர் தலைமையிலான மாவட்டம் மற்றும் வட்டார அளவிலான குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில், பனை மரங்களை வேரோடு வெட்டி விற்கவும் செங்கல் சூழல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட குழுவில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, கதர் கிராம தொழில் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதே போல தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தலைமையேற்ற வட்டார குழுவில் வேளாண் துறை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வட்டார அளவிலான குழு வயல் ஆய்வு மேற்கொண்டு பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பயிர் சாகுபடி பதிவேட்டில் பதிவேற்றம் செய்யும். இதன் பின்னர், தவிர்க்க முடியாத காரணங்களால், பனை மரங்களை வெட்ட வேண்டி வந்தால், மாவட்ட அளவிலான குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
பனை மரத்தை வெட்டும் போது, அதனை ஆய்வு செய்ய குழுவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் வெட்டப்பட்ட மரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி கட்டாயம் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கு இணையாக 10 மரங்களை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...