Saturday, May 16, 2026

கோவை சிங்காநல்லூர் சாலையில் காரோடு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!

Must read

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வசந்தாமில் அருகே நேற்று சுடலைமுத்து என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது ஆட்டோவை திருப்பும் போது, அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. மது போதையில் காரில் வந்த இளைஞர்கள் சுடலை முத்துவிடம் சண்டையிட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆட்டோ ஒட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். தொடர்ந்து இளைஞர்கள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது, காரை எடுக்க விடாமல் ஆட்டோ ஓட்டுநர் காரின் முன்பு நின்று தடுத்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் காரை இயக்கியதில் பக்கவாட்டில் தொங்கியபடி சிறிது தூரம் ஆட்டோ ஓட்டுநரை காரில் இழுத்து சென்றனர். சிறிது தூரம் தொங்கியபடி இருந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை முத்து பின்னர் காரில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காரில் தொங்கிய ஆட்டோ ஓட்டுநரை சாலையில் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், காரில் வந்த இளைஞர்கள் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிங்காநல்லூர் பகுதி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு காரில் வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக இசைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கடைசியாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் இசைக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில்...