கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம் இந்நிலையில் வாரத்தில் வியாழன் சந்தை நடைபெறும் என்பதால் இங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார் அப்பொழுது மைதானத்தில் குடிபோதையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் இளம் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் கோபமடைந்த இளம்பெண் குடிபோதையில் வம்பு செய்தவரை தனது கைகளால் தாக்கியுள்ளார் இதனால் கீழே விழுந்த அவர் மயக்கம் அடைந்த நிலையில் அங்கு நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் உடனடியாக தலையிட்டு இளம்பெணை தடுத்து நிறுத்தி காவல்துறைக்கும் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயக்கமுற்ற குடிபோதை நபரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றி வைத்தனர் அப்பொழுது அந்த இளம் பெண் காவல்துறையினர் வராமல் ஆம்புலன்ஸ் எடுக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டார் இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையிடம் அந்த இளம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சரியான நேரத்துக்கு வரவில்லை.
மேலும் என் துப்பட்டாவை பிடித்து இழுத்தவனை இறக்கி விடுங்கள் நான் அவனை கொன்று விடுகிறேன் என்று காவல்துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்பு காவல்துறையினர் இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து ஆம்புலன்சை எடுத்துச் சென்றனர் இதனால் காந்திமா நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


