Sunday, September 13, 2026

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராகவும், எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.இதன் காரணமாக, எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு எஸ்.பி.வேலுமணி தரப்பும் மாறி மாறி சபாநாயகரிடம் மனுக்களை அளித்தனர். இதற்கிடையே, அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ்.பி.வேலுமணி தரப்பும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இருதரப்பு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து, சபாநாயகரிடம் தாங்கள் கொடுத்திருந்த மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “தேர்தல் முடிந்த பிறகு சில கருத்து வேறுபாடுகளால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுத்தோம்.எங்கள் தரப்பை சேர்ந்த 25 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் மனு கொடுத்தார்கள். நாங்களும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு கொடுத்திருந்தோம். இருவரும் நாங்கள் கொடுத்த மனுக்களை வாபஸ் பெற்று விட்டோம். அந்த கடிதத்தை பேரவை தலைவரிடம் கொடுத்துள்ளோம். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தான். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி தான். தோல்விக்கு பிறகு நாங்கள் சில கருத்துக்களை முன்வைத்திருந்தோம். அதிமுக நூறாண்டுகளுக்குப் பிறகும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துக்களை சொல்லி இருந்தோம். கட்சியில் வெற்றி, தோல்வி சகஜம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற கருத்தை வைத்திருந்தோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து ஒன்றன் பின் ஒன்றாக செய்வதாக எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். எங்களுக்கு இடையே பிளவு இல்லை; கருத்து வேறுபாடு தான்.

பதவிக்காக சென்றதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் பதவிக்காக செல்லவில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். ஆளும் தரப்பும் சொல்லிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வேலுமணி, “நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து பேட்டி அளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே பேரவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் சில மனுக்களை அளித்திருந்தார்கள். அந்த மனுக்கள் என்னிடம் ஆய்வில் உள்ளன.

இதற்கிடையே இரு வேறு குழுக்களாக இருந்த அதிமுக உறுப்பினர்கள் தனித்தனியாக என்னை சந்தித்து மனுக்களை அளித்துள்ளார்கள். அந்த மனுக்கள் ஆய்வில் இருக்கின்றன. நாளை காலை எனது முடிவை அறிவிக்கிறேன்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...