டெங்கு அச்சுறுத்தல்… 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!
Dengue Fever | 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 363 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் பொதுமக்கள் மருத்துவர்களை அணுகுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் மழை கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.’


