சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது – நடிகை விஜயலட்சுமி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை பயன்படுத்திக் கொண்டதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் கூறினார்.வீரலட்சுமி தன்னை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டேன் இதன் காரணமாகத்தான் நான் கண்டித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டும் இருந்தேன்.யாரும் தன்னை கட்டாய படுத்தியோ, மிரட்டியோ இந்த வழக்கை வாபஸ் பெற வில்லை.
நானாக தான் வாபஸ் பெறுகிறேன்.சீமானிடம் இது குறித்து பேசினேன் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை நான் தொடர்வதாக இல்லை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இந்த வழக்கு தனக்கு திருப்திகரமாக இல்லை. புகார் அளித்த தன்னை மட்டுமே அசிங்கப்படுத்தி வந்தனர்.சீமான் மீது காவல்துறையிடம் அளித்த புகார் குறித்து விசாரணை தொய்வாகவே இருந்தது. சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது .தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன்.”என்றார்


