திருப்பதி பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தான நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆந்திர தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்…
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளார்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர மாநில தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி, ” லக்ஷிதா என்ற ஆறு வயது சிறுமி பெற்றோருடன் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை புலி தாக்கி மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன…
இதன் ஒரு பகுதியாக தேவஸ்தானத்தின் நிதி உதவியுடன் நடைபாதை அருகில் உள்ள பகுதிகளில் 500 ட்ராப் கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு 300 கேமராக்கள் இதுவரை பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி முறையில் செயல்படும் இந்த கேமராக்கள் மூலம் சிறுத்தை புலி, கரடி ஆகியவை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அந்த பகுதியில் இருக்கிறதா என்று உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இதுவரை ஐந்து சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று அடைத்து வைத்திருக்கிறோம்…


