சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேசுகையில் அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம்-
எனது தலைமையிலான இந்த அரசு உயர்கல்வியின் பொற்காலமாக திகழும்;இது மாணவர்களுக்கான அரசு என்பதில் பெருமைகொள்கிறேன்.
இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.
மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலை. உருவாக்கி உள்ளது.
தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை, என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார்


