Thursday, June 4, 2026

‘ஜாக்பாட்’ – ராஜ்யசபா சீட் வழங்கினார் முதல்வர் விஜய்

Must read

அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்த தவெகவினர் ..!

அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ,பட்டக்காரன் புதூர் மற்றும் கரப்பாளையம் புதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில்...

ரூ.18,600 கோடி முதலீடு; 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…

18,600 கோடி முதலீட்டில் எல்&டி லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்..!

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுத்தொடர்பாக...

தமிழ்நாடு அமைச்சரவை நாளை கூடுகிறது

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் ஆட்சியமைக்கப் போதிய எண்ணிக்கை கிடைக்காததால் திமுக...

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அவர் தனது மாநிலங்களவை உறுப்பனர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காலியான அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில், மாநிலங்களவை இடைத் தேர்தலில் தவெக போட்டியிட்டால் மிக எளிதாக வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில், அக்கட்சியை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டி முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து, மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து, காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழக சட்டப் பேரவையில் 5 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், அமைச்சரவையில் அந்த கட்சியின் சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸுக்கு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்றது. அப்போது அக் கட்சியின் சார்பில் கிறிஸ்டோர் திலக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தேர்தல் முடிவு வெளியான இரண்டு நாட்களில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும் அமைச்சரவையிலும் பங்கேற்றது.

கடந்த மூன்று மாதங்களில் இரு கட்சிகளிடம் இருந்து இரண்டு எம்பிகள் பதவிகளை காங்கிரஸ் கட்சி பெற்றதன் மூலம், மாநிலங்களவையில் அதன் பலம் 30 ஆக அதிகரிக்க உள்ளது.

இதற்கிடையே இந்தியா கூட்டணியில் தவெகவை இணைப்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், முதல்வர் விஜய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்த தவெகவினர் ..!

அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ,பட்டக்காரன் புதூர் மற்றும் கரப்பாளையம் புதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில்...

ரூ.18,600 கோடி முதலீடு; 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…

18,600 கோடி முதலீட்டில் எல்&டி லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்..!

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுத்தொடர்பாக...

தமிழ்நாடு அமைச்சரவை நாளை கூடுகிறது

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் ஆட்சியமைக்கப் போதிய எண்ணிக்கை கிடைக்காததால் திமுக...

கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் – மு.க.ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு சென்ற திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...