Thursday, June 4, 2026

பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்…

Must read

அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்த தவெகவினர் ..!

அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ,பட்டக்காரன் புதூர் மற்றும் கரப்பாளையம் புதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில்...

ரூ.18,600 கோடி முதலீடு; 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…

18,600 கோடி முதலீட்டில் எல்&டி லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்..!

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுத்தொடர்பாக...

தமிழ்நாடு அமைச்சரவை நாளை கூடுகிறது

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் ஆட்சியமைக்கப் போதிய எண்ணிக்கை கிடைக்காததால் திமுக...

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி அண்ணாமலை இன்னும் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை முதலில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், அந்த இயக்கத்தின் பெயர், விவரம் அதன் செயல்பாடு குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2020 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். உடனடியாக அவர் பாஜக மாநில தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். ஆனால் கடந்த ஆண்டு அவரது மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலையிடம் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்பட்டது.இந்த அதிமுக – பாஜக கூட்டணி சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. அதிமுக 47 தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இந்நிலையில் தான் பாஜகவின் தோல்வியை தொடர்ந்து அண்ணாமலை விரைவில் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தான் அண்ணாமலை உடனடியாக அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தனி இயக்கம் ஒன்றை கட்டமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலை தற்போது “We the Leaders” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது தமிழ்நாட்டில் கோவையை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதனை இயக்கமாக மாற்றும் திட்டத்தில் அல்லது வேறு பெயரில் புதிய இயக்கத்தை அண்ணாமலை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த இயக்கத்தின் கீழ் அண்ணாமலையை போன்ற ஒத்த எண்ணம் கொண்டவர்களை அணியாக ஒருங்கிணைக்கவும், இளைஞர்கள், இளம்பெண்களை இயக்கத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு அரசியல் சார்ந்த பயிற்சி அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் அண்ணாமலை இல்லை என்று கூறப்படுகிறது. முதலில் இந்த இயக்கத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தக்கட்ட நகர்வை அண்ணாமலை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்த தவெகவினர் ..!

அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ,பட்டக்காரன் புதூர் மற்றும் கரப்பாளையம் புதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில்...

ரூ.18,600 கோடி முதலீடு; 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…

18,600 கோடி முதலீட்டில் எல்&டி லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்..!

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுத்தொடர்பாக...

தமிழ்நாடு அமைச்சரவை நாளை கூடுகிறது

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் ஆட்சியமைக்கப் போதிய எண்ணிக்கை கிடைக்காததால் திமுக...

கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் – மு.க.ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு சென்ற திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...