Sunday, September 13, 2026

பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்…

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி அண்ணாமலை இன்னும் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை முதலில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், அந்த இயக்கத்தின் பெயர், விவரம் அதன் செயல்பாடு குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2020 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். உடனடியாக அவர் பாஜக மாநில தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். ஆனால் கடந்த ஆண்டு அவரது மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலையிடம் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்பட்டது.இந்த அதிமுக – பாஜக கூட்டணி சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. அதிமுக 47 தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இந்நிலையில் தான் பாஜகவின் தோல்வியை தொடர்ந்து அண்ணாமலை விரைவில் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தான் அண்ணாமலை உடனடியாக அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தனி இயக்கம் ஒன்றை கட்டமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலை தற்போது “We the Leaders” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது தமிழ்நாட்டில் கோவையை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதனை இயக்கமாக மாற்றும் திட்டத்தில் அல்லது வேறு பெயரில் புதிய இயக்கத்தை அண்ணாமலை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த இயக்கத்தின் கீழ் அண்ணாமலையை போன்ற ஒத்த எண்ணம் கொண்டவர்களை அணியாக ஒருங்கிணைக்கவும், இளைஞர்கள், இளம்பெண்களை இயக்கத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு அரசியல் சார்ந்த பயிற்சி அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் அண்ணாமலை இல்லை என்று கூறப்படுகிறது. முதலில் இந்த இயக்கத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தக்கட்ட நகர்வை அண்ணாமலை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...