Monday, September 14, 2026

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இங்கு அரசின் விதியை மீறி அளவிற்கு அதிகமாக கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அதிக பாரத்துடன் கனிமவளத்தை ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் கிராமப்புறச் சாலைகள் சேதம் அடைவதாகவும், கட்டுப்பாடு இல்லாமல் கனரக வாகனங்கள் இயங்குவதால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மனுக்கள் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை என்பதும் அப்பகுதி மக்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. ஆகையால், கனிமவளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்க தேவையில்லை, அவற்றை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புளியரை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த கோரிக்கை வலுத்துள்ளது. இதையடுத்து, கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு நேரடியாக இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், இன்று (மே 25) அதிகாலை கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு, புளியரை சோதனை சாவடியில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, புளியரை சோதனைச்சாவடி வழியாக சென்ற கனிமவள வாகனங்களின் பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆய்வின் ஒரு பகுதியாக சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர்களிடமும் கனிமவள வாகனங்களின் வருகை போன்ற பல்வேறு முக்கிய விபரங்களைக் கேட்டறிந்தார்.குறிப்பாக, அனுமதி சீட்டுடன் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? அனுமதிக்கப்பட்ட அளவில் தான் கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? முறைப்படிதான் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார். கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவின் இந்த திடீர் ஆய்வு அதிரடியாக இருந்த நிலையில், இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...