Monday, May 25, 2026

தவெகவுக்கு ஆதரவு அளித்த விசிக…

Must read

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பாரா என தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், தலா 2 எம்.எல்.ஏக்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மை பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவை தவெக நாடி வந்தது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவனிடம் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரடியாக பெற்றுக் கொண்டார்.

அந்தக் கடித்ததில், “தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சியமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. விசிகவின் தேர்தெடுக்கப்பட்ட 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இதனை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நிலையான மற்றும் ஜனநாயக அரசாங்கத்தை உறுதி செய்யும் நலன் கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிகவின் ஆதரவின் மூலம் தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக பெற்றுள்ளது. முன்னதாக, திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டி, தவெக நிர்பந்திக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எந்த நிபந்தனையும் இன்றி தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனயடுத்து நேற்று ஆதரவில்லை என தெரிவித்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இன்று ஆதரவளிப்பதாக கடிதத்தை தவெகவிடம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் விரைவில் முதலமைச்சராக பதிவேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறதுதமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு மே 4-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை பெறாததால், இதர கட்சிகளில் ஆதரவைப் பெற வேண்டிய சூழல் உருவானது. இதனையடுத்து, திமுகவின் கூட்டணிக் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது.முதல் கட்சியாக, திமுக கூட்டணியில் 20 ஆண்டுகள் அங்கம் வகித்த காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தவெகவின் எம்எல்ஏக்கள் பலம் 113-ஆக உயர்ந்தது. இதில், தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காரணத்தினால் ஒன்றில் ராஜிநாமா செய்ய வேண்டும். இதனால் ஆதரவு எம்.எல்.ஏ-களில் எண்ணிக்கை 112 என குறையும்.

இதனையடுத்து, தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவிடம் தவெக ஆதரவு கோரியது. தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியே இருந்து ஆதரவளிப்பதாக நேற்று (மே 8) அறிவித்தன. இதன் மூலம் தவெகவுக்கான ஆதரவு 116 என உயர்ந்தது.திருமா முடிவுக்காக காத்திருந்த தவெக

பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிகவின் முடிவுக்காக தவெக காத்துக் கொண்டிருந்தது. இதனிடையே, தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் விசிக நிர்வாகிகள் தொடர்ந்து 2 நாட்களாக ஆலோசித்து வந்தனர்.

இதுதொடர்பாக விசிகவின் உயர்மட்டக் குழு கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டு, அதில் இதுகுறித்து முடிவெடுக்க திருமாவளவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அந்த வகையில், இன்று காலை 10 மணிக்கு தவெகவுக்கு ஆதரவா, இல்லையா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. காலை முதல் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்பாகவே, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை நேரில் அழைத்து விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளார். அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தங்களின் ஆதரவு கடித்ததை தவெக நிர்வாகிகளான செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியவர்களிடம் வழங்கியது. இதன் மூலம் விஜய், தமிழக முதலமைச்சர் ஆவதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...