Sunday, May 24, 2026

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு…

Must read

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், 9 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையையும் மேற்கொண்டார். இந்த நிலையில், சோழவந்தான் தவெக எம்எல்ஏ தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, நாளை (மே 11) காலை 09.30 மணிக்கு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடுகிறது. இதில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எம்எல்ஏவாகப் பதவியேற்கவுள்ளதாக சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த மே 07- ஆம் தேதி மாலை 05.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் திமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவராக கே.என்.நேரு, கட்சியின் கொறடாவாக எ.வ.வேலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 59 இடங்களில் வெற்றி பெற்று திமுக பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உள்பட அனைத்து சலுகைகளும் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைக்கும்.108 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க, திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். எனினும் வரும் மே 13- ஆம் தேதிக்குள் முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...