Monday, May 25, 2026

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Must read

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், தவெக 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் 1977இல் எம்.ஜி.ஆர் பெற்ற 33.5% வாக்குகளே அதிகபட்சமாக இருந்த நிலையில், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 34% வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வரலாற்று படைத்திருக்கிறது தவெக.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துகள் – மோடி

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மிகச் சிறப்பாக செயல்பட்ட தவெக கட்சிக்கு எனது வாழ்த்துகள். தமிழக மக்களின் வளர்ச்சிக்கான அனைத்து செயல்பாடுகளையும் பாஜக அரசு செய்யும். என்.டி.ஏக்கு வாக்களித்த மக்களுக்கும் எனது வாழ்த்துகள் ” என்று தெரிவித்துள்ளார்இனிமேல் வாரிசு அரசியல் இல்லை – அண்ணாமலை

பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக மக்களின் தீர்ப்புக்கு தான் தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது, வாரிசு அரசியல் இனிமேல் இல்லை என்ற கருத்தை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளிப்படுத்தி இருப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சி.மக்கள் அனைவரும் அடுத்த தலைமுறை அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். தமிழக அரசியலில் மிக சிறப்பான அறிமுகத்தை பெற்றதற்காக தவெக மற்றும் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்.டி.ஏ கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார் – தமிழிசை சௌந்திரராஜன்

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அளித்த பேட்டியில், “மக்களின் நம்பிக்கையை விஜய் காப்பாற்றுவார் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் யாரும் கவலையடைய வேண்டாம். அரசியலில் சிலர் வெற்றி பெறலாம், சிலர் தோற்கலாம்.

ஆனால், அவர்கள் என்ன பணிக்காக அரசியலில் இருக்கிறார்களோ அந்த பணியை தொடர்வது தான் இயற்கை. என் அரசியல் பணி இன்னும் தீவிரமாக தொடரும். மக்களுக்காக நல்லது செய்தால் புதிய ஆட்சி பாராட்டு பெறும்” என்றார்.தமிழகத்தில் அமைதி புரட்சி – கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “உலக வரலாற்றில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட நிகழ்வுகளுடன் ஒப்பிடும் வகையில், தமிழக மக்கள் தேர்தல் வாயிலாக அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் உரிமையை அசைத்து பார்க்கும் விதமாக தவெக ஆட்சி அமைக்கவுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.முதல் தேர்தலிலேயே ஈர்க்கக்கூடிய சாதனை – ஜெகன் மோகன் ரெட்டி

தவெக தலைவர் விஜய்க்கு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது பதிவில், “என் அன்பு சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது ஈர்க்கக்கூடிய சாதனை. மக்கள் பணிக்காக புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...