Thursday, July 23, 2026

தவெக தொடர்ந்து முன்னிலை.. அரசியல் ஆலோசகருடன் விஜய் அவசர ஆலோசனை!

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தொடர் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகருடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 107 சட்டமன்ற தொகுதிகளுடன் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டை சுற்றி போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியுடன் தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.தவெக தலைவர் வீட்டுக்கு வருகை தந்த ஐபிஎஸ் அதிகாரிகள்
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளான சேபாஸ், கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் சென்றுள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை அவரது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி தொடர்ந்து அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்து வருகிறார்.

தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த ஜான் ஆரோக்கிய சாமி
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றில் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தயாரித்துக் கொடுத்த பேச்சுகளை மட்டுமே விஜய் பேசி உள்ளார். மேலும், ஜான் ஆரோக்கியசாமி வகுத்துக் கொடுத்த வியூகங்களை செயல்படுத்தியுள்ளார். தற்போது, பெரும்பான்மை தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் நெருங்கி வரும் நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமியுடன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக அறிவிப்பு
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு வெளியிடும் என கூறப்படுகிறது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...