Saturday, May 16, 2026

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு 2 அடுக்கு பாதுகாப்பு….

Must read

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

தவெக தலைவர் விஜயை காண அவரது வீட்டின் முன்பு ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவரும் நிலையில் அவரது வீட்டிற்கு செல்லும் வழியிலும், வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகுத்தது.
அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, முதன்முறையாக தேர்தல் களம்கண்ட தவெக முன்னிலை வகித்து வருகிறது.தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே காலை 10.50 நிலவரப்படி தவெக தான் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 220 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக முதலிடத்திலும், அதிமுக இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.இந்நிலையில், விஜய்யை முன்கூட்டியே வாழ்த்த, பலர் அதிகாலையே விஜய் வீட்டின் முன்பு திரண்டதால் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் வீட்டிற்கு வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விஜய் இல்லத்திற்கு வரக்கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலிலும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். விஜயை காண்பதற்காக அங்கு ரசிகர்களும் தொண்டர்களும் அதிகளவில் கூடாமல் இருக்க 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே தவெக பனையூர் தலைமை அலுவலகத்தின் வெளியேயும் தொண்டர்களும், நிர்வாகிகளும் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக இசைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கடைசியாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் இசைக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில்...