Friday, July 24, 2026

வேட்புமனுவை தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவி மற்றும் தாயுடன் சென்று இன்று (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்கும் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நாளான இன்று காரைக்குடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் இன்று அவர் அவர் பகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி எம்எல்ஏ மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள அமமுகவை சேர்ந்த தேர் போகி பாண்டி, தவெக சார்பில் டாக்டர் பிரபு ஆகியோர் களத்தில் உள்ளனர். போட்டி கடுமையாக இருக்கும் சூழலில், நேற்று பரப்புரையை தொடங்கிய சீமான் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக தனது சொந்த ஊர் மற்றும் எல்லா சமுதாய மக்களும் காரைக்குடியில் இருப்பதால் தான் இங்கு போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் கேட்டது இலவசம்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “எம் மண்ணின் வளத்தை, மக்களின் நலத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகிறீர்கள். கடனில் மட்டும் வளர்ச்சி என்று காட்டினால் எப்படி? கல்வி, மருத்துவம், குடிநீர், தடையற்ற மின்சாரம், தரமான போக்குவரத்து, நல்ல சாலை போன்றவை தரமானதாக உள்ளதா? ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்க விட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சியா? வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு மழை நீர், கழிவு நீர் வழிந்தோட வசதி ஏற்படுத்திக் கொடுத்து மக்களைப் பாதுகாப்பது தான் ஆட்சி.யார் கேட்டது இலவசம்.. ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்தபோது ‘இலவசங்களை மக்கள் விரும்பவில்லை, அதை எதிர்பார்க்கவில்லை, அவர்கள் வேலை தான் கேட்கிறார்கள்’ என்று பேசியது உண்டு. இப்போது திருப்பி நீங்கள் அதையே செய்கிறீர்கள். ஒரு இனத்தின் மகனாக, இலவசத்திற்கு ஆயிரம், ஐநூறுக்கு கையேந்துவதை தன்மான இழப்பாக, இனமான இழப்பாகப் பார்க்கிறேன். அவமதிப்பாகப் பார்க்கிறேன். இது எந்த மாதிரி ஆட்சி முறை?இப்படியே சென்றால் எங்கு போய் நிறுத்துவீர்கள்?
இப்போது பத்தரை லட்சம் கோடி கடன் உள்ளது. அடுத்த ஐந்தாண்டு யாராவது வந்தால்.. கொடுமை! இதை எப்படி இந்த அறிவுச் சமூகம் ஏற்கிறது? மக்களை ‘இலவசம் கொடுக்கிறோம்’ என்று சொல்லி ஏன் ஏமாற்ற வேண்டும்?மிக்சி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், வேட்டி, சேலை, ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு – இதை எல்லாம் கூட வாங்கிக் கொள்ள முடியாதா? ஒரு அடிப்படை தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஏழ்மை, வறுமை – அந்த அளவுக்குக் கூட வருமானம் இல்லை. என்ன கொடுமை இது?எங்கே கொண்டு போய் நிறுத்துவீர்கள் என்று சொல்லுங்கள். மலை, மணல், மரங்கள் இல்லை.. கொடுமை!” என தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...