Thursday, July 23, 2026

அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி? முழு பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில வாரங்களாக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முறை டெல்லி சென்றும் கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நிறைவடைந்ததையடுத்து, அக்கட்சிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, பாஜக 27 , பாமக 18, அமமுக 11, தமாக 5, ஐஜேகே 2, தமமுக 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக சார்பாக போட்டியிடும் 23 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை அதிமுக அறிவித்திருந்து. இதில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் இபிஎஸ். மேலும், வேப்பனஹள்ளியில் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், கரூர் தொகுதியில் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையில் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அப்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகளை அதிமுக ஒதுக்கிய நிலையில், 169 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், “அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக கூறப்படும் நிலையில், அங்கு பாமகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி அமைத்த பிறகு எல்லாம் சமமாக தான் பார்க்க வேண்டும். சிறியவர், பெரியவர்கள் எல்லாம் இல்லை. எல்லாம் கட்சிக்கும் பலம் உள்ளது. எல்லாம் கட்சியும் சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். 234 தொகுயிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...