Monday, July 13, 2026

அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி? முழு பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில வாரங்களாக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முறை டெல்லி சென்றும் கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நிறைவடைந்ததையடுத்து, அக்கட்சிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, பாஜக 27 , பாமக 18, அமமுக 11, தமாக 5, ஐஜேகே 2, தமமுக 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக சார்பாக போட்டியிடும் 23 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை அதிமுக அறிவித்திருந்து. இதில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் இபிஎஸ். மேலும், வேப்பனஹள்ளியில் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், கரூர் தொகுதியில் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையில் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அப்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகளை அதிமுக ஒதுக்கிய நிலையில், 169 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், “அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக கூறப்படும் நிலையில், அங்கு பாமகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி அமைத்த பிறகு எல்லாம் சமமாக தான் பார்க்க வேண்டும். சிறியவர், பெரியவர்கள் எல்லாம் இல்லை. எல்லாம் கட்சிக்கும் பலம் உள்ளது. எல்லாம் கட்சியும் சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். 234 தொகுயிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...