Tuesday, February 17, 2026

திருப்பரங்குன்றம் மலை தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துக்கு அனுமதி – பாஜக கடும் எதிர்ப்பு

Must read

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா இந்து முன்னணி, பாஜகவினரின் பலத்த எதிர்ப்புக்கு இடையே கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மலையில் ஏற்றப்படும் கொடி கம்பத்தை காவல்துறை பாதுகாப்புடன் பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றதால் மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.
இதற்காக 21 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற நிகழ்வை நடத்துவதற்காக இஸ்லாமிய சமூகத்தினர் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
கோட்டாட்சியர் உத்தரவைத் தொடர்ந்து 20 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்கா கொடிக்கம்பத்தை பழுது பார்ப்பதற்காக மலைப்பாதை வழியாக இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மலைப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பகுதி மக்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அகல் விளக்கேற்றி போராட்டம்

இதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு கொடியேற்ற விழாவை முன்னிட்டு மலைக்குச் செல்லும் பாதையில் நேற்று காலை 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் மலைக்கு செல்ல இஸ்லாமியர்கள் 100 பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் பரவியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மலையடிவாரத்தில் உள்ள தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்காமல் வெளியூரில் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்களை எப்படி அனுமதிக்கலாம் என கூறி கையில் அகல் விளக்குடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும். பொதுமக்களை மாலை 6 மணியை கடந்தும் விடுவிக்காததால் அவர்களை விடுவிக்க கோரி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் – மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சந்தனகூடு விழா தொடக்கம்

இந்த நிலையில் சந்தனக்கூடு விழா பெரிய ரத வீதியில் உள்ள தர்காவில் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் கொடி எடுத்துச் செல்லப்பட்டு பெரிய ரத வீதி, கீழ ரத வீதி, 16 கால் மண்டபம் வழியாக மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது. மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட கொடி பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் ஏற்றப்பட்டது. இதனிடையே,ஏற்கனவே மலை மேல் ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்
காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் மலைப்பாதை வழியாக மலை மேல் உள்ள தர்காவிற்கு கொண்டு சென்றனர்.அப்போது, மலைக்கு செல்ல தங்களை அனுமதிக்காமல் இஸ்லாமியர்களை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் எனக்கூறி, பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ இஸ்லாமியர்களை மட்டும் அனுமதிக்கும் காவல்துறை தங்களை ஏன் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை? என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள், தங்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி, மலை மேல் தீபம் ஏற்ற செல்வதாக கூறி ‘அரோகரா’ கோஷமிட்டு காவல்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மற்றொரு பாதையில் கையில் அகல் விளக்குகளுடன் சென்று தீபம் ஏற்ற முயற்சித்தவர்களை காவல்துறை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து தாங்கள் கொண்டு வந்த தீபத்தை பழனியாண்டவர் கோவிலில் ஏற்ற அனுமதி தாருங்கள் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, பெண் ஒருவர் கோயில் முன் விளக்கேற்றி வழிபாடு செய்தார்.

பல்வேறு பரபரப்புகளுக்கு பின் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. அதேசமயம் மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

வரும் 6ஆம் தேதி முதல் விருப்பமான பெற்றுக் கொள்ளலாம் தவெக அறிவிப்பு..!

சட்டப் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.