Sunday, September 13, 2026

கோவையில் சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு..!

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் (நவ.28) இந்தக் குடியிருப்பின் A-பிளாக்கில் 3 வீடுகள், C-பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளிலிருந்து 42 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் (48), இர்பான் (45), கல்லூ ஆரிப் (60) ஆகிய 3 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதையும், அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதையும் கண்டறிந்தனர்.

நேற்று (நவ. 29) அந்த பகுதிக்குச் சென்ற போலீசார் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் பார்த்திபன் என்ற காவலருக்கு பலத்த காயம் ஏற்படவே, தப்பி செல்ல முயன்ற 3 பேரையும் அவர்களுடைய காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர் காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மூவரையும் சுட்டு பிடித்தது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.3 பேரையும் கவுண்டம்பாளையம் பகுதிக்கு அழைத்துவந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கு பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

இதனிடையே மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆசிப் என்பவருக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக கொள்ளையன் ஆசிப்பின் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...