Wednesday, February 18, 2026

SIR பணியில் முறைகேடு.. கலெக்டர், தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

ஆத்தூர் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் பணியில் முறைகேடு நடந்துள்ளதால் கலெக்டர், தாசில்தார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (நவம்பர் 30) திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சேர்க்கைப் பணியின்போது ஏறக்குறைய 7227 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை உள்ளனர்.

சின்னாளபட்டி பேரூராட்சியில் மொத்த வாக்குகளில் சுமார் 7227 வாக்காளர்களின் பெயர்கள் ‘இடம்பெயர்ந்துவிட்டார்கள்’ (Shifted) என குறிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாகச் சென்று அங்கிருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை (BLO) வற்புறுத்தி, “இனி சேரும் வாக்குகளை ‘Shifted’ என்று போடுங்கள்” எனக் கூறி வாக்காளர் சேர்க்கைப் பணியை முடித்துவைக்கச் சொல்லி இருக்கிறார்.

ஆத்தூர் தொகுதியில் மொத்தம் 21800 முதல் 22000 வாக்குகள் வரை ‘Shifted’ என பதிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிறப்பு சேர்க்கை பணி தொடர வேண்டிய நிலையில் இரவோடு இரவாக பணியை வட்டாட்சியர் முடித்து விட்டார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவான நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுப்பட்டியில் இருந்தும் சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சின்னாளபட்டி பகுதியில் பலர் வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்கள். எனவே சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து சேர்க்கை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சேர்க்கை பணிகள் அவசரமாக நிறுத்தப்பட்டதால் இன்று வந்த பலரும் வாக்காளராக சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெரிய தவறு நடந்துள்ளதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

குறைகளை சரி செய்ய சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டுள்ளார் – மாவட்ட ஆட்சியர்

அமைச்சர் ஐ. பெரியசாமியின் குற்றச்சாட்டு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் 2, 3 குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், விடுபட்டவர்களை சேர்ப்பதற்கு எடிட் செய்யும் வசதி (Edit option) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தங்களது பதிவு விடுபட்டவர்கள் மீண்டும் 11 ஆம் தேதி வரை வந்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து கட்சியினரும் பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளனர். அதனை சரி செய்வதற்கு சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

எந்த குளறுபடியும் நடைபெறவில்லை – தாசில்தார்

ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் கூறுகையில், ”ஆத்தூர் தொகுதி முழுவதும் தொடர்ந்து எஸ்ஐஆர் படிவம் வாங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு குளறுபடியும் நடைபெறவில்லை. குறிப்பாக வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு உதவும் வகையில் கடந்த இரண்டு வாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் SIR படிவம் பூர்த்தி செய்யவும், பெற்றுக்கொள்ளவும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.
சரியான முறையில் SIR நடைபெற்று வருகிறது. ஒருவேளை விடுபட்டு இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் சேர்ப்பதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...