Thursday, April 9, 2026

SIR பணியில் முறைகேடு.. கலெக்டர், தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

ஆத்தூர் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் பணியில் முறைகேடு நடந்துள்ளதால் கலெக்டர், தாசில்தார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (நவம்பர் 30) திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சேர்க்கைப் பணியின்போது ஏறக்குறைய 7227 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை உள்ளனர்.

சின்னாளபட்டி பேரூராட்சியில் மொத்த வாக்குகளில் சுமார் 7227 வாக்காளர்களின் பெயர்கள் ‘இடம்பெயர்ந்துவிட்டார்கள்’ (Shifted) என குறிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாகச் சென்று அங்கிருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை (BLO) வற்புறுத்தி, “இனி சேரும் வாக்குகளை ‘Shifted’ என்று போடுங்கள்” எனக் கூறி வாக்காளர் சேர்க்கைப் பணியை முடித்துவைக்கச் சொல்லி இருக்கிறார்.

ஆத்தூர் தொகுதியில் மொத்தம் 21800 முதல் 22000 வாக்குகள் வரை ‘Shifted’ என பதிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிறப்பு சேர்க்கை பணி தொடர வேண்டிய நிலையில் இரவோடு இரவாக பணியை வட்டாட்சியர் முடித்து விட்டார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவான நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுப்பட்டியில் இருந்தும் சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சின்னாளபட்டி பகுதியில் பலர் வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்கள். எனவே சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து சேர்க்கை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சேர்க்கை பணிகள் அவசரமாக நிறுத்தப்பட்டதால் இன்று வந்த பலரும் வாக்காளராக சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெரிய தவறு நடந்துள்ளதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

குறைகளை சரி செய்ய சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டுள்ளார் – மாவட்ட ஆட்சியர்

அமைச்சர் ஐ. பெரியசாமியின் குற்றச்சாட்டு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் 2, 3 குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், விடுபட்டவர்களை சேர்ப்பதற்கு எடிட் செய்யும் வசதி (Edit option) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தங்களது பதிவு விடுபட்டவர்கள் மீண்டும் 11 ஆம் தேதி வரை வந்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து கட்சியினரும் பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளனர். அதனை சரி செய்வதற்கு சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

எந்த குளறுபடியும் நடைபெறவில்லை – தாசில்தார்

ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் கூறுகையில், ”ஆத்தூர் தொகுதி முழுவதும் தொடர்ந்து எஸ்ஐஆர் படிவம் வாங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு குளறுபடியும் நடைபெறவில்லை. குறிப்பாக வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு உதவும் வகையில் கடந்த இரண்டு வாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் SIR படிவம் பூர்த்தி செய்யவும், பெற்றுக்கொள்ளவும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.
சரியான முறையில் SIR நடைபெற்று வருகிறது. ஒருவேளை விடுபட்டு இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் சேர்ப்பதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...