Monday, May 25, 2026

மாணவியின் கையில் படுகாயம் -அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு

Must read

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஶ்ரீராம் (43). இவரது மனைவி பரிமளா (34). இருவரும் விசைத்தறி கூடத்தில் தறி ஓட்டும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில் இரு மகன்களும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இச்சிறுமி எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த நவம்பர் 7-ம் தேதி மதியம் 11.30 மணிக்கு, சிறுமி தனது வகுப்பு தோழிகளுடன் பள்ளியில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசிரியை பெரியநாயகி, சிறுமியின் இடதுகை முட்டிக்குக் கீழ் பிரம்பால்அடித்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி இடதுகையை மடக்கிப் பிடித்தவாறு இருந்துள்ளார். அதை கண்ட தாய் பரிமளா, கையில் ரத்தம் கட்டிய வீக்கத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகளிடம் கேட்டதும், “ஆசிரியை குச்சியால் அடித்தார்” என்று கூறியுள்ளார்.மறுநாள் (நவ. 8) பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் கேட்டபோது, “மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுங்கள், செலவு நான் ஏற்கிறேன்” என்று கூறியதால், பரிமளா வீட்டுக்கு திரும்பினார். ஆனால், சிறுமியின் நிலை மோசமானதால், நவம்பர் 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள சிஎன்எஸ் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு வந்து பரிமளாவிடம் விசாரித்தபோது, “ஆசிரியை செலவு ஏற்கிறார், வழக்கு வேண்டாம்” என்று வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து சிகிச்சை முடிந்து நவ. 17 அன்று சிறுமி வீடு திரும்பினார். அப்போது, மருத்துவச் செலவாக ரூ.41,000-ஐ ஆசிரியை பெரியநாயகி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால், நவம்பர் 21 அன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் தாய் பரிமளாவிடம் விசாரித்தனர். இம்முறை அவர் ஆசிரியை பெரியநாயகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியை பெரியநாயகி மீது கருமத்தம்பட்டி போலீசார் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சிறுமிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...