Tuesday, February 17, 2026

மாணவியின் கையில் படுகாயம் -அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு

Must read

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஶ்ரீராம் (43). இவரது மனைவி பரிமளா (34). இருவரும் விசைத்தறி கூடத்தில் தறி ஓட்டும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில் இரு மகன்களும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இச்சிறுமி எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த நவம்பர் 7-ம் தேதி மதியம் 11.30 மணிக்கு, சிறுமி தனது வகுப்பு தோழிகளுடன் பள்ளியில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசிரியை பெரியநாயகி, சிறுமியின் இடதுகை முட்டிக்குக் கீழ் பிரம்பால்அடித்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி இடதுகையை மடக்கிப் பிடித்தவாறு இருந்துள்ளார். அதை கண்ட தாய் பரிமளா, கையில் ரத்தம் கட்டிய வீக்கத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகளிடம் கேட்டதும், “ஆசிரியை குச்சியால் அடித்தார்” என்று கூறியுள்ளார்.மறுநாள் (நவ. 8) பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் கேட்டபோது, “மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுங்கள், செலவு நான் ஏற்கிறேன்” என்று கூறியதால், பரிமளா வீட்டுக்கு திரும்பினார். ஆனால், சிறுமியின் நிலை மோசமானதால், நவம்பர் 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள சிஎன்எஸ் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு வந்து பரிமளாவிடம் விசாரித்தபோது, “ஆசிரியை செலவு ஏற்கிறார், வழக்கு வேண்டாம்” என்று வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து சிகிச்சை முடிந்து நவ. 17 அன்று சிறுமி வீடு திரும்பினார். அப்போது, மருத்துவச் செலவாக ரூ.41,000-ஐ ஆசிரியை பெரியநாயகி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால், நவம்பர் 21 அன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் தாய் பரிமளாவிடம் விசாரித்தனர். இம்முறை அவர் ஆசிரியை பெரியநாயகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியை பெரியநாயகி மீது கருமத்தம்பட்டி போலீசார் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சிறுமிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

வரும் 6ஆம் தேதி முதல் விருப்பமான பெற்றுக் கொள்ளலாம் தவெக அறிவிப்பு..!

சட்டப் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.