Thursday, April 9, 2026

மாணவியின் கையில் படுகாயம் -அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஶ்ரீராம் (43). இவரது மனைவி பரிமளா (34). இருவரும் விசைத்தறி கூடத்தில் தறி ஓட்டும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில் இரு மகன்களும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இச்சிறுமி எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த நவம்பர் 7-ம் தேதி மதியம் 11.30 மணிக்கு, சிறுமி தனது வகுப்பு தோழிகளுடன் பள்ளியில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசிரியை பெரியநாயகி, சிறுமியின் இடதுகை முட்டிக்குக் கீழ் பிரம்பால்அடித்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி இடதுகையை மடக்கிப் பிடித்தவாறு இருந்துள்ளார். அதை கண்ட தாய் பரிமளா, கையில் ரத்தம் கட்டிய வீக்கத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகளிடம் கேட்டதும், “ஆசிரியை குச்சியால் அடித்தார்” என்று கூறியுள்ளார்.மறுநாள் (நவ. 8) பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் கேட்டபோது, “மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுங்கள், செலவு நான் ஏற்கிறேன்” என்று கூறியதால், பரிமளா வீட்டுக்கு திரும்பினார். ஆனால், சிறுமியின் நிலை மோசமானதால், நவம்பர் 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள சிஎன்எஸ் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு வந்து பரிமளாவிடம் விசாரித்தபோது, “ஆசிரியை செலவு ஏற்கிறார், வழக்கு வேண்டாம்” என்று வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து சிகிச்சை முடிந்து நவ. 17 அன்று சிறுமி வீடு திரும்பினார். அப்போது, மருத்துவச் செலவாக ரூ.41,000-ஐ ஆசிரியை பெரியநாயகி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால், நவம்பர் 21 அன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் தாய் பரிமளாவிடம் விசாரித்தனர். இம்முறை அவர் ஆசிரியை பெரியநாயகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியை பெரியநாயகி மீது கருமத்தம்பட்டி போலீசார் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சிறுமிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...