Sunday, September 13, 2026

கோட்டூர் அரசு பள்ளியில் இருக்கை உடைந்து விழுந்து 3 மாணவிகள் காயம்!

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்து, பிரார்த்தனை முடிந்தவுடன் அவரவர் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள், தங்களது வகுப்பறைக்குச் சென்று இரும்பால் ஆன இருக்கையில் அமர்ந்தனர். ஏற்கனவே வெல்டிங் விட்டிருந்த அந்த இருக்கை மாணவிகள் அமந்தவுடன் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 3 மாணவிகள் கீழே விழுந்தனர். இதனை பார்த்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மாணவிகளை கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அந்த மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவியின் தந்தை சதீஷ் கூறுகையில், “இன்று காலையில் பள்ளிக்கு சென்ற எனது மகள் கீழே விழுந்ததாக பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தகவல் தெரிய வந்தது. அதன் பேரில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றோம். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எனது மகளை அழைத்து வந்துள்ளோம். காலுக்கு கீழ்ப்புறம் அடிபட்டதால் எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த வெள்ளை நடராஜ் கூறுகையில், “தமிழக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் அமரும் இருக்கைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் அமரும் இருக்கை முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...