Wednesday, June 24, 2026

தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு விளக்கம் அளித்துள்ளார்.

Must read

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ....

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் - மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி...

கரூரில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம், கூட்ட நெரிசல் காரணமாக சோகமாக மாறியது. தவெக பரப்புரையில் விஜய்யை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலால் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விஜய் பிரச்சார நிகழ்வில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல், சமூக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர்.கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு கூறுகையில், “கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நடந்தது. கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ச்சியில் கூடிய 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் இந்த சம்பவத்தால் இறந்ததும் அனைவருக்கும் துயரத்தை அளித்துள்ள செய்தி.
கூட்ட நெரிசல் குறித்த தகவலறிந்ததும் முதலமைச்சர் உத்தரவுப்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. 39 பேர் உயிரற்ற சடலங்களாவே மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர். இன்று சிகிச்சையில் இருந்த ஒருவரும் உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது.இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் கூராய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. கரூரை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 114 மருத்துவர்கள், 23 செவிலியர்கள், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விரைந்தனர்.கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர். தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கரூர் வருகை தந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும், அவர்கள் உடன் இருப்பவர்களுக்கும் ஆறுதல் அளித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு யாருக்கேனும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அந்த அறையை தொடர்பு கொள்ள இங்கும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவெகவினர் குறுகலான பகுதிகளில் அனுமதியை கோரினர். 23 ஆம் தேதி அளித்த முதல் மனுவில் தவெகவினர் பெட்ரோல் பங்க் உள்ள ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது தவெகவினரிடம் கலந்து ஆலோசித்த பின்னர்தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது. வேலுசாமிபுரத்தில் முன்னதாக வேறு கட்சியினர் கூட்டம் நடந்ததால் அதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ....

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் - மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி...

மகன் மிதுனுக்கு அதிமுகவில் எந்த பதவியும் கொடுக்க மாட்டோம்- எடப்பாடி பழனிசாமி

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவாகவும் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனி...