சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன், அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (01.12.2023) பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மரபேட்டை வீதி அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மகுனி ஷூ மகன் சர்பேஸ்வர் ஷூ (39)-யை கைது செய்து அவரிடமிருந்து 5.250 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கஞ்சா சாக்லேட் பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது..


