கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சிவதாசன் (39) கடந்த 07.11.2023 அன்று பொள்ளாச்சி சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் சிவதாசனின் செல்போனில் போன் பேசி விட்டு தருவதாக கூறி சிவதாசனின் செல்போனை கேட்டு வாங்கி திருடிச் சென்றனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் இன்று (09.11.2023) தங்கம் தியேட்டர் அருகே வாகன சோதனை மேற்கண்ட போது இரு சக்கர வாகனத்தில் வந்த வள்ளி@பிரவீன் குமார் (22), தாகிர் உசேன் (22) மற்றும் மோகன்(24) ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் மேற்படி நபர்களை நிலையம் அழைத்து விசாரணை செய்வதில் மேற்படி குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என தெரியவந்தது. இந்நிலையில் மேற்படி பொள்ளாச்சி பகுதியில் கண்ணன் மகன் வள்ளி@பிரவீன் குமார் (22), ஜான் பாஷா மகன் தாகிர் உசேன் (22) மற்றும் ஈஸ்வரன் மகன் மோகன் (24) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.



