Thursday, March 12, 2026

மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெக தலைவர் விஜய்

Must read

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெக தலைவர் விஜய் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்வதாக அறிவித்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அன்றிரவே முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் , திமுக அமைச்சர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பிற கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தனர். இருப்பினும், சம்பவத்தன்று இரவே சென்னைக்கு திரும்பிய தவெக தலைவர் விஜய், அடுத்த சில நாட்களில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.இருப்பினும், ஓரிரு நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜய். அவர் நேரில் செல்லாதது குறித்தும், அந்த வீடியோவில் பேசிய கருத்துக்களும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், விஜய்யின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு நேற்று ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் நேரில் சந்திக்க வருவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அறிவழகன், தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் எந்த தேதியில் அனுமதி கொடுத்தாலும் அன்று தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.

மனுவிற்கு டிஜிபி அலுவலகத்தில் என்ன பதில் கொடுக்கப்பட்டது? விஜய் எப்போது செல்கிறார்? போன்ற பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விஜய்யின் வழக்கறிஞர் அறிவழகன் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....