Sunday, May 24, 2026

விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறுமா? ஜான் பாண்டியன்

Must read

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் 4 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 25 பெண்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம், 200 பேருக்கு அரிசி, பருப்பு, வேஷ்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் யாருடன் கூட்டணி? என்பது குறித்து தெரிவிப்போம். எந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அது நல்ல திட்டம் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் திமுக உள்ளிட்டவர்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வார்கள்.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை அதிகமாக இருக்கிறது. இதனை தடுக்க அந்த பகுதி மக்கள் வெகுண்டு எழ வேண்டும். விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறாது. மக்கள் கூட்டத்தை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவர் வரட்டும். தேர்தலை சந்திக்கட்டும். அரசியல் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் நேரத்தில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமையும்.
விரைவில் தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒரே மேடையில் சந்திப்போம் என கூறியுள்ளார்கள். எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை அழைப்பு வந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக, திமுக என்ற 2 கட்சிகள் இடையே தான் போட்டி. மூன்றாவது, நான்காவது அணிகள் போட்டிக்கு வராது.பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறீர்கள். பெண்களை பெண்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மதுக்கடைகள் நாட்டில் இருக்க தான் செய்யும். பெற்றோர் குழந்தைகளை சரியாக வளர்க்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாக போகிறார்கள்? அனைத்துக்கும் அரசை குறை கூறக்கூடாது. நடிகர் விஜய் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி விட முடியாது” என்று ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...