Thursday, March 12, 2026

விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறுமா? ஜான் பாண்டியன்

Must read

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் 4 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 25 பெண்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம், 200 பேருக்கு அரிசி, பருப்பு, வேஷ்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் யாருடன் கூட்டணி? என்பது குறித்து தெரிவிப்போம். எந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அது நல்ல திட்டம் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் திமுக உள்ளிட்டவர்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வார்கள்.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை அதிகமாக இருக்கிறது. இதனை தடுக்க அந்த பகுதி மக்கள் வெகுண்டு எழ வேண்டும். விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறாது. மக்கள் கூட்டத்தை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவர் வரட்டும். தேர்தலை சந்திக்கட்டும். அரசியல் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் நேரத்தில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமையும்.
விரைவில் தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒரே மேடையில் சந்திப்போம் என கூறியுள்ளார்கள். எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை அழைப்பு வந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக, திமுக என்ற 2 கட்சிகள் இடையே தான் போட்டி. மூன்றாவது, நான்காவது அணிகள் போட்டிக்கு வராது.பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறீர்கள். பெண்களை பெண்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மதுக்கடைகள் நாட்டில் இருக்க தான் செய்யும். பெற்றோர் குழந்தைகளை சரியாக வளர்க்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாக போகிறார்கள்? அனைத்துக்கும் அரசை குறை கூறக்கூடாது. நடிகர் விஜய் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி விட முடியாது” என்று ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....