Monday, July 13, 2026

விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறுமா? ஜான் பாண்டியன்

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் 4 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 25 பெண்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம், 200 பேருக்கு அரிசி, பருப்பு, வேஷ்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் யாருடன் கூட்டணி? என்பது குறித்து தெரிவிப்போம். எந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அது நல்ல திட்டம் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் திமுக உள்ளிட்டவர்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வார்கள்.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை அதிகமாக இருக்கிறது. இதனை தடுக்க அந்த பகுதி மக்கள் வெகுண்டு எழ வேண்டும். விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறாது. மக்கள் கூட்டத்தை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவர் வரட்டும். தேர்தலை சந்திக்கட்டும். அரசியல் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் நேரத்தில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமையும்.
விரைவில் தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒரே மேடையில் சந்திப்போம் என கூறியுள்ளார்கள். எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை அழைப்பு வந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக, திமுக என்ற 2 கட்சிகள் இடையே தான் போட்டி. மூன்றாவது, நான்காவது அணிகள் போட்டிக்கு வராது.பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறீர்கள். பெண்களை பெண்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மதுக்கடைகள் நாட்டில் இருக்க தான் செய்யும். பெற்றோர் குழந்தைகளை சரியாக வளர்க்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாக போகிறார்கள்? அனைத்துக்கும் அரசை குறை கூறக்கூடாது. நடிகர் விஜய் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி விட முடியாது” என்று ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...