Saturday, May 30, 2026

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

Must read

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள – தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி 20 கிலோ மீட்டருக்கு மேல், வனப்பகுதிக்குள் செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள் அதிகம் வசித்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ரயிலில் அடிபட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க, நீதிமன்ற உத்தரவின்படி தமிழக வனத்துறையின் சார்பில் ஏஐ உதவியோடு இயங்கும் தெர்மல் கேமராக்கள், மதுக்கரை முதல் வாளையார் வரை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தமிழக எல்லைப்பகுதிகளில் வசிக்கிற யானைகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனால் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள வனப்பகுதியில் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால், யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கேரள வனப்பகுதியான வாளையார் பூங்கா அருகே இன்று காலை 4.30 மணியளவில், கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வயது ஆண் யானையின் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் யானை உடல் சிதறி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த யானையின் உடல்பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வன ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், “கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே ரயில் மோதி யானை உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. எட்டிமடை – மதுக்கரை இடையே தமிழக வனத்துறையின் சிறப்பான முயற்சியால் 12 கோபுரங்களில் தலா இரண்டு கேமராக்கள் உட்பட மொத்தம் 24 தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் 2022 அக்டோபர் மாதம் முதல் ரயில் மோதி யானைகள் எதுவும் உயிரிழக்கவில்லை.

எனவே தமிழக வனத்துறைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது போல வாளையார் – கொல்லங்கோடு இடையேயும் தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்று ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க முடியும். ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் 10 முதல் 15 யானைகள் ரயில் மோதி உயிரிழக்கின்றன. எனவே ரயில்வே துறை இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...