Sunday, September 13, 2026

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகள் மூவரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த நவம்பர் 2ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை 24 மணி நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் இவர்களின் உறவினரான தவசி என்ற குணா என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் கடந்த 27ஆம் தேதி குற்றவாளிகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இந்த குற்றவாளிகள் மூன்று பேரும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அன்று காலை அன்னூர் அருகே செரையம்பாளையம் பகுதியில் 3 பேரும் மது அருந்தி கொண்டிருந்த போது கண்டித்த ஆட்டு வியாபாரியை அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.முன்னதாக கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேருக்கும் எதிராக கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து முதல் கட்டமாக 50 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை கடத்தல் நகை பறிப்பு ஒன்றாக இணைந்து குற்ற சம்பவங்களை ஈடுபடுதல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் குற்றவாளிகள் மூவரின் புகைப்படங்களை இன்று காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஆட்டு வியாபாரியை கொலை செய்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறையினர் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...