Wednesday, March 11, 2026

பேட்ச் வொர்க் மாடல் அரசு திமுக- அண்ணாமலை கருத்து

Must read

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்படுகிறார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில், “திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித்ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ! சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத்தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை என மக்கள் புரிந்து கொள்வார்கள்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள அண்ணாமலை தனது X தளத்தில், “கடந்த கால சாதனைகளுக்கு பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை பேசுகிறார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கடந்த நிதி ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் வேலைவாய்ப்பு 1.2% உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் வேலவாய்ப்பு விகிதம் ஒரே அளவாக உள்ளது. 2020-21 ஆம் ஆண்டைப் போலவே 2023-24 ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அப்படியே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறை தொழில்முனைவோர் குறிப்பாணை மூலம் பெறப்பட்ட முதலீடுகளில் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று முதல்வருக்குத் தெரியுமா? தமிழ்நாடு எதிர்காலம் குறித்த தொலைநோக்கை இழந்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....