Sunday, September 13, 2026

வாரிசு அரசியல் செங்கோட்டையன் பகிரங்க குற்றச்சாட்டு!

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின், மாப்பிள்ளை இப்போது கட்சியில் தலையெடுத்து வருகிறார். அதிமுகவும் வாரிசு அரசியல் செய்து வருகிறது என்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கட்சியில் நீக்கப்பட்டது மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே எனது முழுமையான உழைப்பை கொடுத்து வந்தேன். என்னை பொருத்தவரை தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும், பிறரையும் ஏமாற்றுபவர்கள் நேரத்தையும் பிறரின் உழைப்பையும் கெடுக்கிறார்கள். அப்படிபட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. அதிமுகவிலும் வாரிசு அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை என அவரது குடும்பத்தினர்கள் அதிமுகவில் தலையெடுத்து வருவது அனைவரும் அறிந்த உண்மை” என்று செங்கோட்டையன் கூறினார்அதிமுகவில் இருந்து நீக்கம்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனையடுத்து அவரிடம் இருந்த கட்சிப் பதவிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை திமுகவின் பி டீம் என செங்கோட்டையன் முன்னிலையிலேயே டிடிவி தினகரன் விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு: இதையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் அடுக்கினார். அதில் என்னை திமுகவின் ‘பி’ டீம் என இபிஎஸ் விமர்சிக்கிறார். கொடநாடு வழக்கில் இபிஎஸ் தான் ஏ1. நான் யாருக்கும் எப்போதும் பி டீம் இல்லை. யார் பி டீம் என தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். இபிஎஸ் தற்போது தற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே இருந்து வருகிறார். பொதுச் செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி அதிமுகவில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அவர் என்னை எந்த அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கினார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...