ஆண்டுக்கு 4 முறை எவ்வித கட்டணமும் இன்றி தங்களது நிலைக் கட்டணத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிறு, குறு தொழில்துறை மின்சார நிலைக் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை ஏற்று, மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்டண முறைகளை மாற்றி அமைத்திடுவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.24) திருப்பூர் மாவட்டம் செல்ல உள்ள நிலையில், மின் கட்டணம் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


