Saturday, May 30, 2026

அதிமுகவும், திமுகவும் இரண்டும் ஒரே கட்சிகள் தான்- சீமான்…

Must read

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண்டிபட்டி பகுதியில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர், “ஆண்டிபட்டி தொகுதியில் பல பிரச்சனைகள் உள்ளன. மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு அனைத்து செல்ல வனத்துறை தடுக்கிறது; மேய்ச்சல் நிலம் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக, திமுகவில் ஒரே வீட்டில் உள்ள அண்ணன் தம்பி வேட்பாளராக போட்டியிடுகிறார்கள், கடந்த தேர்தலில் தம்பி உதவி செய்து அண்ணன் வெற்றிபெறுவது, இந்த தேர்தலில் அண்ணன் உதவி செய்து தம்பி வெற்றி பெறுவது என தொடர்ந்து நடைபெறுகிறது. இது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. வாக்குக்கு காசு கொடுப்பதால் ஜனநாயகம் செத்து பணநாயகம் வென்றுள்ளது. பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்.கடலில் தனது அப்பாவின் பேனாவை வைப்பேன் என ஸ்டாலின் சொன்னபோது, அதை தடுத்து நிறுத்தியது இந்த சீமான் மட்டுமே. மக்களுக்கு பிரச்சனை தந்தவர்கள் ஒரு பக்கம். பிரச்சனையை தீர்ப்பவர்கள் நாங்கள் ஒரு பக்கம், எங்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி. நான் ஏசி பஸ் தருகிறேன். அதில் காசு கொடுத்து போங்கள், இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானங்களை இழக்காதீர்கள். நிலம், வளம் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்குவேன், நாட்டு கோழி வளர்ப்பேன், ஆடு, கோழி வளர்ப்பேன். அதில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன். நான் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது நான் 20 ஆயிரம் கொடுப்பேன் என சொல்லி இருக்க மாட்டேனா? வீட்டிற்கு ஹெலிகாப்டர், 1 கிலோ தங்கம் தருவேன் என சொல்ல முடியாதா? எத்தனை காலத்திற்கு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள். இரண்டு கட்சிகளும் மீண்டும் வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா, கொலை கொள்ளை நடக்காமல் இருக்குமா?மலைகளை சுரண்டும் இந்த குவாரி உரிமையாளர்களை ஒரு நாள் மரத்தில் கட்டி வைத்து பச்சை மரத்தால் வெளுத்து எடுப்பேன். கனிம வளங்களை கணக்கு இல்லாமல் வெட்டி எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்தது திமுகவும், அதிமுகவும் தான். பொதுமக்கள் வாக்கு செலுத்தும் போது சிந்தித்து வாக்கு செலுத்துங்கள். அதிமுகவும், திமுகவும் இரண்டும் ஒரே கட்சிகள் தான். அதிமுகவில் இருந்து எத்தனை அமைச்சர்கள் திமுகவில் சென்றுள்ளார்கள்? இந்த தொகுதியில் கூட ஒரே வீட்டில் உள்ள அண்ணன், தம்பி இரண்டும் கட்சிகளிலும் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள். இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கு வாக்களித்து அவர்கள் வென்றார்கள், எம்எல்ஏ ஆனார்கள், அமைச்சர்கள் ஆனார்கள், ஆனால் நீங்கள் தோற்று போனீர்கள், எனவே இந்த முறை எங்களுக்கு வாக்களித்து நீங்கள் வெல்லுங்கள்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...